கதாநாயகனைக் கொலை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றதாய் நினைத்த கொலையாளி பிறகு அதே வழியில் கொல்லப்படுகிறான். கதாநாயகன் பிணமும் கிடைக்காமல் போகிறது. ஏலியனைக் குறித்த ஒரு இரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவுக்கு அந்தக் கொலை முயற்சிப் புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கும் முடிவில் நடந்தது என்ன என்று தெரியாத நிலை, கதாநாயகன் ஒரு நாள் திடீரெனத் திரும்பி வரும் போது புதிர்கள் விடுபடுவதற்குப் பதிலாக கூடுகின்றன. மறுபடி நடக்கும் கொலை முயற்சி, அவன் சமாளிக்க வேண்டியிருந்த இரு எதிரெதிர் சக்தி வாய்ந்த மனிதர்கள், ஏலியன், இரகசிய ஆன்மிக இயக்கம், இல்லுமினாட்டி என்று களம் பல திருப்பங்களுடன் களை கட்டுகிறது. கடைசி வரை ஆபத்தில் இருக்கும் கதாநாயகன் தப்பிக்கிறானா, எப்படி என்பதை காதல், பாசமுள்ள குடும்பம், விஞ்ஞானம், அமானுஷ்ய சக்திகள் என்ற வலைப்பின்னலுடன் சொல்லும் இந்த நாவல் விறுவிறுப்பு மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்து நினைவில் நிற்கும்!
There are no reviews yet.