Tamil Thriller Novel ம்யூனிக் நகரில் இறந்து கொண்டிருந்த ஒரு மனிதன் அமானுஷ்ய முறையில் திடீரென்று உயிர் பெறுகிறான். அவன் மர்மமான முறையில் காணாமலும் போகிறான். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் இல்லுமினாட்டியின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. அவர் பதவியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் நடக்கின்றன. நடக்கப் போவதை எல்லாம் முன்னமே சங்கேத வார்த்தைகளால் சொல்லப்பட்டு இருக்கும் பழங்காலச் சுவடியில் உள்ள தகவல்களை அறியவும், தடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில் பூமியில் நடப்பதைத் தீர்மானிக்க ஏலியனும் முயல்கிறது. அமானுஷ்ய சக்திகள் சூழ்ச்சிகள், குடும்பம், பாசம், அரசியல், காதல், விண் ஆராய்ச்சிகள் எனப்பல மாறுபட்ட அம்சங்களைக் கலந்த இந்தச் சுவாரசியமான நாவலில் கடைசியில் யார் எப்படி வெல்கிறார்கள் என்பதை அறியப் படியுங்கள். முடிவில் மறக்க முடியாத வாசிப்பனுபவமாக இது அமையும் என்பது உறுதி!
There are no reviews yet.